கரூர், ஏப். 13: அரக்கோணத்தில் நடந்த இரட்டைக்கொலையை கண்டித்து கரூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக கரூர் தபால் தந்தி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமிகாந்தன் தலைமை வகித்தார். இதில், பல்வேறு சார்பு இயக்கங்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.