திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருவள்ளூர் மாவட்ட கிராமிய தெருக்கூத்து கலைஞர்கள் சங்க தலைவர் ரூபன், கௌரவத் தலைவர் கமலக்கண்ணன் உள்ளிட்ட கலைஞர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து வந்து மனு அளித்தனர். அந்தமனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் பரவிவரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட பல்வேறு தொழில்களில் ஒன்று தெருக்கூத்து கலைத்தொழில். இந்நிலையில் தற்போது சில நாட்களாக கொரோனா கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டு மீண்டும் தெருக்கூத்து கலைகளில் ஈடுபட உள்ள நிலையில், மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்கூத்து கலைஞர்களும், அவர்களின் குடும்பத்தினரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.