ஈரோடு, ஏப்.12: திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் இருளர் தெருவை சேர்ந்த குப்பன் மகள் ரேவதி (20). இவர், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் சிறுவலூர் பெரியண்ணகவுண்டர் வீதியை சேர்ந்த சக்திவேல் என்பவரை திருமணம் செய்து வசித்து வந்தார். ஆனால், சக்திவேலுடன் 5 மாதம் வாழ்ந்த ரேவதிக்கு, சக்திவேலின் தம்பி அரவிந்தனுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருணம் செய்து கொண்டனர். சக்திவேலின் திருமணத்தை பஞ்சாயத்துதாரர்கள் முன்னிலையில் முறிவு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அரவிந்தனும், ரேவதியும் கடந்த ஒன்றரை மாதமாக சிறுவலூரில் உள்ள தனியார் கம்பெனியில் கூலி வேலை செய்து வந்தனர்.