திருவாரூர், ஏப்.12: திருவாரூர் மாவட்டம் நன்னிலம், குடவாசல் பகுதிகளில் கோடைநெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் குடவாசல் பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கோடை நெல் விவசாய பணி களை துவக்கி உள்ளனர். ஆழ்துளை கிணறுகள் மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் பெறுவதற்கு வசதியாக மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக விவசாயத்திற்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் பெற முடியும் என்ற நம்பிக்கையில் குடவாசல் மற்றும் நன்னிலம் பகுதிகளில் உள்ள விவசாயிகள், திருந்திய முறையில் எந்திரங்கள் மூலம் நெல் சாகுபடி பணிகளை துவக்கி உள்ளனர்.