மேலூர், ஏப்.12: மேலூர் அருகே விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் வெட்ட வெளியில் அப்படியே கிடக்கின்றன. மேலூர் அருகே தெற்குதெரு ஊராட்சியில் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்வதற்காக அரசு மேல்நிலைப் பள்ளி அருகே கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு தெற்குதெருவை சுற்றி இருக்கும் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்தனர்.
கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை நெல் கிட்டங்கிக்கு அனுப்ப வேண்டிய அலுவலர்கள் இன்னும் அவற்றை அப்படியே போட்டு வைத்துள்ளனர். நெல்லுக்கு உண்டான தொகை விவசாயிகளுக்கு கிடைத்து விட்டதால், அவர்கள் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை பற்றி கவலை கொள்ளவில்லை.