திருவில்லிபுத்தூர், ஏப். 10: திருவில்லிபுத்தூரில் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் குப்பைகளை எரிப்பதால், உருவாகும் புகையால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தீ வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக மதுரை, ராஜபாளையம், தென்காசி, சங்கரன்கோவில், செங்கோட்டை ஆகிய ஊர்களுக்கு செல்லும் வாகனங்களும், ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வாகனங்களும் அடிக்கடி சென்று வருகின்றன.