மதுரவாயலில் செல்போன் கடையில் பூட்டை உடைத்து ₹75,000 18 செல்போன் கொள்ளை

பூந்தமல்லி: சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கம் பிரதான சாலையில் செல்போன் கடை நடத்தி வருபவர் அர்ஜுன் (26), இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டுச் சென்றுள்ளார். நேற்று காலை கடையை திறக்க வந்துபோது கடை ஷட்டரின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. கடையின் உள்ளே சென்று பார்த்தபோது கல்லா பெட்டியில் இருந்த ரூ.75 ஆயிரம் பணம், விற்பனை செய்ய வைத்திருந்த புதிய விலை உயர்ந்த 18 செல்போன்கள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. மதுரவாயல் போலீசில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். அருகே இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வுசெய்தனர். அதில் பைகில் வரும் 2 மர்ம நபர்கள் கையில் கடப்பாரையுடன் வந்து பூட்டை உடப்பதும் அதற்கு முன்தொப்பி, மாஸ்க் அணிந்த ஒருவர் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா இணைப்பை துண்டிப்பதும் பதிவாகியுள்ளது. போலீசார் கொள்ளையடித்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: