பழவேற்காடு புனித மகிமை மாதா திருவிழா கொடியேற்றம்

பொன்னேரி, ஏப். 10: பழவேற்காட்டில் உள்ள புனித மகிமை மாதா திருத்தலத்தின் 506வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நேற்று மாலை நடைபெற்றது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டும் கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை உலகை உலுக்கி வருகிறது. இந்நிலையில் பழவேற்காடு மக்களால் பெரும் சிறப்பாக கொண்டாடப்படும் இத்திருவிழாவின் கொடியேற்றம் கொரோனா விதிமுறைகளுடன் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இத்திருத்தலத்தின் அதிபர் காபிரியேல் தலைமையில் திருப்பலி நடத்தப்பட்டு சிறப்பு ஆராதனையுடன் கொடியேற்றப்பட்டது. உள்ளூர் மக்கள் ஏராளமானோர் முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர். வரும் ஏப்ரல் 17,18தேதிகளில் திருவிழா நடைபெற உள்ளது.

Related Stories: