பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு பேரூராட்சியில் வளாகத்தில் துப்புரவு தொழிலாளர்கள் கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் 30க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பேரூராட்சி முழுவதும் காலை முதல் மாலை வரை தூய்மை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், துப்புரவு தொழிலாளர்களுக்கு கையுறை, காலணிகள், பாதுகாப்பு கவசம், கிருமி நாசினி, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்.