கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் நீதிமன்றம் எதிரே கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொற்றுநோய் பரவும் அபாயத்தில் பொதுமக்கள் உள்ளனர். கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பஜார் ஒட்டி ரெட்டம்பேடு சாலை உள்ளது. இந்த சாலை ஓரமாக மாவட்ட குற்றவியல் நீதிமன்றம், 5 கல்யாண மண்டபம் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளிட்ட வீடுகள் உள்ளன. ரெட்டம்பேடு சாலையின் ஒருபுறம் கால்வாய் இல்லாமல் வீடு, கல்யாண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் ஆங்காங்கே குட்டை போல் நிற்பது வழக்கமாகியுள்ளது. தொடர்ந்து இந்த கழிவுநீர் அருகிலேயே மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்துக்கு கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம், மாதர்பாக்கம், ஊத்துக்கோட்டை, பஞ்செட்டி, கவரப்பேட்டை, புதுவாயல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பொதுமக்கள், குற்றவாளிகள், காவல் துறை அதிகாரிகள் வருவதும் போவதுமாக இருந்து வந்த நிலையில் அந்த கழிவுநீரால் துர்நாற்றம் வீசி வருகிறது.