சென்னை: போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் தனது இல்லத்தை சசிகலா தனது உறவினர்களுடன் சென்று பார்வையிட்டார். சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, தி.நகரில் உள்ள இல்லத்தில் தங்கினார். தீவிர அரசியலில் ஈடுபடுவதாக அறிவித்த அவர் திடீரென அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். சசிகலாவின் இந்த திடீர் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவர் கடந்த மாதம் தஞ்சாவூர் புறப்பட்டு சென்றார். அங்கிருந்தவாரே ஒரு மாத காலமாக தமிழகம் முழுவதும் கோயில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த வாரம் சென்னை திரும்பிய சசிகலா, தி.நகரில் உள்ள கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கியுள்ளார்.