மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில், 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். காணவன், மனைவி படுகாயம் அடைந்தனர். செங்கல்பட்டு அடுத்த பெரியார் நகர் களத்துமேட்டை சேர்ந்தவர்கள் அப்துல்லா (எ) அப்துல் ரசாக் (23). இவரது மனைவி சுவேதா (22). இவர்களது நண்பர்கள் பெரிய நத்தம் அஜய் (எ) லொட்டை அஜய் (21). புலிப்பாக்கம் பூபாலன் (எ) பிரேம்குமார் (25). நேற்று முன்தினம் அப்துல்லா, தனது மனைவியுடன் காரில் சென்னைக்கு சென்றார். அவர்களுடன், நண்பர்கள் அஜய், பூபாலன் ஆகியோர் சென்றனர். இரவு 10.30 மணியளவில் கோவளம் தர்காவுக்கு அனைவரும் சென்றனர். அங்கு தொழுகை முடித்துவிட்டு? கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் புறப்பட்டனர். காரை பூபாலன் ஓட்டி சென்றார்.