தொட்டியம், ஏப்.5: முசிறி தொகுதி திமுக வேட்பாளரும், வடக்கு மாவட்ட செயலாளருமான காடுவெட்டி தியாகராஜன் நேற்று இறுதி கட்ட பிரசாரத்தை தொட்டியம் காவல் நிலையம் அருகே தொடங்கி தொண்டர்களுடன் முக்கிய வீதிகளில் நடந்து சென்று உதயசூரியனுக்கு வாக்குகள் சேகரித்து பிரசாரத்தை தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் முன்பாக முடித்தார்.அப்போது அவர் பேசியதாவது.தமிழகம் முன்னேற்ற பாதையில் செல்வதற்குநீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றால் மக்களுக்கு விடியல் கிடைக்கும். அதுபோல முசிறி தொகுதியின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபடுவேன். குறிப்பாக முசிறி தொகுதியை தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக மாற்றும் அளவிற்கு எனது செயல் திறன் இருக்கும்.