உடுமலை, ஏப். 5: உடுமலை உழவர்சந்தை எதிரே உள்ள முழு நேர கிளை நூலகம் எண் 2-ல், கொரோனா தொற்றை எதிர்க்கும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.உடுமலை அரசு சித்த மருத்துவ பிரிவு, நூலக வாசகர் வட்ட நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். சித்த மருத்துவர் லட்சுமிபதிராஜ் வழிகாட்டுதலின்பேரில் இது வழங்கப்பட்டது.