புதுக்கோட்டை, ஏப். 4: புதுக்கோட்டை மாவட்டம் ஆரியூர் குமரன் பல்தொழில்நுட்ப கல்லூரியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நடந்து வரும் இரண்டாம் கட்ட மறு பயிற்சியை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலுமான உமா மகேஸ்வரி ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான உமா மகேஸ்வரி கூறியதாவது:தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் 6ம் தேதி நடக்கிறது. சட்டமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் மொத்தம் 1,902 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் 9,128 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணிபுரிய உள்ளனர்.