தேனியில் 181 பேர் நீட் தேர்வு எழுதினர்

 

தேனி, மே 6: தேனி மாவட்டத்தில் நடந்த நீட் நுழைவுத் தேர்வில் 181 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். அதில் 11 பேர் ஆப்சென்ட் ஆகினர். நாடு முழுவதும் மருத்துவ இளநிலைப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நேற்று நடந்தது. தேனி மாவட்டத்திற்கான நுழைவுத் தேர்வு தேனி அருகே முத்துதேவன் பட்டியில் உள்ள வேலம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள மையத்தில் நேற்று நடந்தது.

இத்தேர்வில் 192 பேர் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று நடந்த தேர்வினை 181 பேர் எழுதிய நிலையில் 11 பேர் தேர்வு எழுத வராமல் ஆப்சென்ட் ஆகினர். தேர்வு மையத்திற்கு செல்வதற்கு முன்பாக தேர்வு எழுத வந்த மாணவ மாணவியர் கடும் சோதனைகளுக்கு பின்பு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வினை யொட்டி தேர்வு மையத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

The post தேனியில் 181 பேர் நீட் தேர்வு எழுதினர் appeared first on Dinakaran.

Related Stories: