திருப்பரங்குன்றம் தொகுதியில் ராஜன்செல்லப்பாவை ஆதரித்து துணை முதல்வர் ஓபிஎஸ் பிரசாரம்

மதுரை, ஏப்.2:  திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜன்செல்லப்பாவை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார். திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜன் ெசல்லப்பா எம்எல்ஏ, விவசாயிகள், காய்கறி வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். இதுதவிர முக்கிய பிரமுகர்களை சந்தித்து அவர் ஆதரவு கோரினார். இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தனக்கன்குளம், திருநகர், பசுமலை, திருப்பரங்குன்றம், சம்பக்குளம் பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது, அவரை ஆரத்தி எடுத்து பொதுமக்கள் வரவேற்றனர். பிரசாரத்தின் போது அவர் வாக்குறுதி அளித்து பேசுகையில், ‘சரவண பொய்கையில் சுகாதாரமாக்கி நிரந்தர நீர்த்தேக்கம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். இத்தொகுதிக்கான பிரத்யேக தனியார் துறை ேவலைவாய்ப்பு மையம் அமைக்கப்படும். கிரிவலப்பாதையில் பக்தர்கள் இளைப்பாறும் வகையில் நவீன கூடம் அமைக்கப்படும்.

 சுற்றுச்சூழல் பூங்கா கொண்டு வரப்படும். தென்கால் கண்மாய் யில் படகு குழாம் ஏற்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக வேட்பாளர் ராஜன்செல்லப்பாவை ஆதரித்து அவனியாபுரத்தில் பிரசாரம் செய்தார். பிரசாரத்தின்போது மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், துணைசெயலாளர் செல்வக்குமார் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: