கரூர், ஏப்.2: கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதி திமுக வேட்பாளர் சிவகாமசுந்தரி நேற்று தொகுதிக்குட்பட்ட விடுபட்ட பகுதியில் விர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
கடந்த 2 வாரமாக பிரசாரம் மேற்கொண்டு வரும் அவர், நேற்று மதியம் பழைய ஜெயங்கொண்டம் சந்தை, சுவாதி நிறுவனத்துக்கு உட்பட்ட பகுதி, ஏமூர் கொங்கு நகர், மேலடை பகுதிகளில் திறந்த வேனில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். சென்ற இடமெல்லாம் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.பொதுமக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்ட போது பேசியதாவது: கிருஷ்ணராயபுரம் தொகுதியை வளர்ச்சியடைந்த தொகுதியாக மாற்ற தேவையான அனைத்து பணிகளையும் நான் சிறப்பாக மேற்கொள்வேன். தொலைநோக்கு பார்வையோடு திமுக தலைவர் 7 உறுதிமொழிகள் அறிவித்துள்ளார்.