இலுப்பூர், ஏப்.2: அன்னவாசல் பேருந்து நிலையம் அருகே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பேசியதாவது:விவசாயத்தை நம்பியுள்ள நமது நாட்டில், மத்தியில் ஆளும் பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இச்சட்டத்தை ஆதரிக்கும் தமிழகத்தில் ஆளும் எடப்பாடி தலைமையிலான அரசு மக்கள் விரோத அரசாகும். வகுப்பு வாத கட்சியான பாஜக தேர்தலில் அதிமுக முகமுடி அணிந்து போட்டியிடுகிறது. நாட்டின் நலம் பாதுகாக்கப்படவும், மதசார்பின்மை கொள்கை காப்பாற்ற படவும், அரசியல் அமைப்பு சட்டம் பாதுகாக்கப்படவும். மதசார்தபற்ற தேசிய முற்போக்கு கூட்டணி கட்சியின் வேட்பாளர் பழனியப்பனுக்கு வாக்களிக்க வேண்டும்.