அரியலூர், ஏப்.1: அரியலூர் பெரிய கடை வீதியில் இயங்கி வருகிறது பிரபல நகை கடை. இக்கடையில் அன்மையில் வழக்கத்திற்கு மாறாக கூட்டமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று முன்தினம் மாலை வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் 2வது நாளாக நேற்று காலையும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்பணம் நகைக்கடையில் வியாபாரத்திலிருந்து கணக்கில் காட்டப்படாமல் வைக்கப்பட்டிருந்ததா அல்லது அரசியல் கட்சிகளின் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணமா என்பது குறித்து வருமான வரித்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.