ஜெயங்கொண்டம், ஏப்.1: ஜெயங்கொண்டம் அருகே அருள்மொழி கிராமத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இக் கோயிலில் கடந்த 28ம் தேதி முதல் கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் யாக பூஜைகள், பந்தனம் யாத்ரா தானம் நடைபெற்று முடிந்தது. நேற்று காலை 9.30 மணியளவில் சிவாச்சாரியார்கள் யாகசாலையில் வைத்து இருந்த புனிநீர் கலசங்களை தலையில் சுமந்து கோயிலை வலம் வந்து, சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க சுந்தரேஸ்வரர் கோயில் மூலஸ்தான விமான கலசத்திற்கு 10 மணியளவில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.