தேவதானப்பட்டி, ஏப். 1: தேவதானப்பட்டி அருகே டூவீலர்கள் மோதிய விபத்தில் முதியவர் பலியானார். 2 பேர் படுகாயமடைந்தனர்.
ஆண்டிபட்டி அருகே புள்ளிமான்கோம்பை நடுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த சிலர் நேற்று பெரியகுளம் அருகேயுள்ள காமாட்சிபுரத்திற்கு உறவினர் வீட்டு விஷேசத்திற்கு டூவிலரில் வந்துள்ளனர். விஷேசத்தை முடித்து விட்டு பொன்ராம், பாண்டி ஆகியோர் டூவிலரில் ஊருக்கு திரும்பியுள்ளனர். தேவதானப்பட்டி அருகே நல்லகருப்பன்பட்டி பிரிவில் டூவிலரை திருப்பும் போது பின்னால் வந்த காமாட்சிபுரத்தை சேர்ந்த தினேஷ்குமார் (21) என்பவரது டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பாண்டி (55) சம்பவ இடத்திலேயே பலியானார்.