கடையம், மார்ச் 31: பொட்டல்புதூரில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கிய 3 பேரை போலீசார் கைதுசெய்தனர். கடையம் அருகே பொட்டல்புதூர் பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கிவைத்து விற்கப்படுவதாக ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்ஐ முத்துகிருஷ்ணன் தலைமையில் எஸ்பி தனிப்பிரிவு ஏட்டு முருகன் மற்றும் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.