மன்னார்குடி, மார்ச். 31: மன்னார்குடி தொகுதி திமுக வேட்பாளர் டிஆர்பி ராஜா எளவனூரிலிருந்து நேற்று பிரசாரத்தை துவக்கினார். கோட்டூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பாலையக்கோட்டை, பரசபுரம், தென்பரை மேலக்காடு, வல்லூர், ராதாநரசிம்மபுரம், தென்பரை, குறிச்சி உள்ளிட்ட 8 ஊராட்சிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வேட்பாளர் டிஆர்பி ராஜா பிரசாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க கேட்டுக்கொண்டார். அப்போது, வேட்பாளர் டிஆர்பி ராஜா பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தென்பரை பாலையூர் பாலம், வல்லூர் ராஜா தெரு பாலம் உடனடியாக கட்டித்தரப்படும்.