அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா

ஆண்டிபட்டி, மார்ச் 31: ஆண்டிபட்டியில்  உள்ள காளியம்மன் கோயிலில் பங்குனி உற்சவ திருவிழா கடந்த 4 நாட்களுக்கு முன் தொடங்கியது. கடந்த 26ம் தேதி வைகை ஆற்றங்கரையில் இருந்து திருமஞ்சனநீர் எடுத்து வந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து அன்று இரவு மாவிளக்கு பூஜையும், சனிக்கிழமை பெண்கள் பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனையடுத்து பக்தர்கள் தீச்சட்டி, காவடி, பால்குடம் எடுத்து தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். ஞாயிற்றுக்கிழமை முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

Related Stories: