கோபால்பட்டி, மார்ச் 31: நத்தம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் ஆண்டிஅம்பலம் எம்எல்ஏ போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று இவர் நத்தம் சந்தனகருப்பு கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தனது பிரசாரத்தை துவங்கினார். தொடர்ந்து அவர் வேலம்பட்டி, சேர்வீடு, புதுப்பட்டி, குமரபட்டி, பாதசிறுகுடி, மாம்பட்டி, நடுவனூர், செங்குளம், ஆவிச்சிபட்டி, அப்பாஸ்புரம், மீனாட்சிபுரம், காமராஜ்நகர், அசோக்நகர், கோவில்பட்டி, நத்தம் பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்தார். வழிநெடுகிலும் இவருக்கு கிராமமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.