கரூர், மார்ச். 31: கரூர் மாவட்டம் வாங்கல் அருகே வங்கியில் பெற்ற கடன் திரும்ப செலுத்தாத நிலையில் வங்கி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் நூற்றுக்கணக்கான மகளிர்கள் வாங்கல் காவல் நிலையம் முன்பு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் இருந்து தலா 5 பேர் குழுவாக கொண்ட 40 மகளிர் குழுவினர் ஏஜெண்ட் மூலம் வங்கியில் பணம் பெற்றுள்ளனர். இந்நிலையில், வங்கியில் வாங்கிய கடனை, அனைத்து குழுவினர்களும் ஏஜெண்ட்கள் மூலம் தவணை செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வாங்கிய கடன் இதுநாள் வரை திருப்பிச் செலுத்தப்படவில்லை என வங்கியில் இருந்து மகளிர் குழுவினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.