துறையூர், மார்ச் 29: துறையூர் தனி தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திராகாந்தி, உப்பிலியபுரம் பகுதி கிராமங்களில் தீவிர பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது துறையூர், உப்பிலியபுரம் பகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை பெற்று கொடுத்துள்ளேன். பச்சைமலையில் மலைவாழ் மக்களுக்காக சாலை வசதியை மேம்படுத்தி கொடுத்துள்ளேன். எனவே உங்களில் ஒருவராக பணியாற்ற மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள். துறையூரை அனைத்து வசதி கொண்ட தொகுதியாக மாற்றுவேன் என்றார்.