திருவாரூர், மார்ச் 28: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்பட்டு கூலித் தொகை முழுமையாக வழங்கப்படும் என திருவாரூர் தொகுதியின் வேட்பாளர் பூண்டிகலைவாணன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பூண்டிகலைவாணன் தொகுதி முழுவதும் பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள், மாணவர், மகளிர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களிடமும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று கொரடாச்சேரி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஊர்குடி, அத்திசோழமங்கலம், திருமதிகுன்னம், தியாகராஜபுரம், காவனூர், அம்மையப்பன், பெருந்தரகுடி, தேவர்கண்டநல்லூர், கமலாபுரம், எருக்காட்டூர், பருத்தியூர், மேலராதாநல்லூர், கண்கொடுதவனிதம், விடயபுரம், முசிறியம், திருவிடைவாசல், அத்திக்கடை, பெருமாளகரம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராமங்களில் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.