பெரம்பலூர்,மார்ச் 29: பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயில் பங்குனி உத்திரப்பெருந் திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் நேற்று வெகுவிமர்சியாக நடைபெற்றது.பெரம்பலூர் நகராட்சியில் 18வது வார்டில் உள்ள மரகதவல்லித் தாயார் சமேத மதனகோபால சுவாமி கோயிலில், பங்குனி உத்திரப்பெருந்திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அன்று மாலை ஹம்ச வாகனத்தில் திருவீதியுலா நடைபெற்றது. 21ம்தேதி சிம்ம வாகனத்திலும், 22ம் தேதி அனுமந்த வாகனத்திலும், 23ம் தேதி ஷேச வாகனத்திலும், 24ம் தேதி வெள்ளி கருட வாகனத்திலும், 25ம் தேதி, யானை வாகனத்திலும் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. 26ம்தேதி திருக்கல்யாண வைபவம் நடத்தப்பட்டு, புஷ்ப பல்லக்கில் சாமி ஊர்வலம் நடந்தது. 27ம் தேதி வெண்ணைத் தாழி நிகழ்ச்சியுடன் குதிரை வாகன சுவாமி ஊர்வலம் நடைபெற்றது.