சேந்தமங்கலம், மார்ச் 29: சேந்தமங்கலம் அருகே, பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் கொலையில், தலைமறைவான நபரை போலீசார் நேற்று கைது செய்தனர். சேந்தமங்கலம் ஒன்றியம் உத்திரகிடிகாவல் ஊராட்சி வெட்டுக்காடு அருந்ததியர் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் பெருமாள்(35). இவருக்கு பிரியா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 2 மகள்களும் உள்ளனர். திமுகவை சேர்ந்த இவர், உத்திரிகிடிகாவல் ஊராட்சி 7வது வார்டு உறுப்பினராகவும், டேங்க் ஆபரேட்டராகவும் பணியாற்றி வந்தார். கடந்த 4 தினங்களுக்கு முன், இரவு பணி முடிந்து, நண்பர் பிரசாந்த்துடன் டூவீலரில் வீட்டுக்கு சென்ற போது, வெட்டுக்காடு பஸ் நிறுத்தம் அருகே, மர்ம நபரால் அரிவாளால் வெட்டி கொலை கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் வேலுதேவன் மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் இக்கொலை நடந்தது தெரிய வந்தது.