பரமக்குடி, மார்ச் 29: பரமக்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகர் எம்எல்ஏ பரமக்குடி நகர் பகுதிகளான 24, 25 வார்டுகளில் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அந்த பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து அமோக வரவேற்பளித்தனர். இதில் நகர செயலாளர் கணேசன், வார்டு செயலாளர் நாகராஜன், முன்னாள் கவுன்சிலர் சுப்பையா, காட்டுபரமக்குடி முருகேசன், மகளிரணி திலகவதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து, கமுதி வடக்கு ஒன்றியம் டி.புனவாசல் உள்ளிட்ட 30 கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, கூடலாஊரணி, பூலாங்கால், காடக்குளம், எழுவனூர் கிராமங்களைச் சேர்ந்த மாற்றுக்கட்சியினர் 300 பேர் சதன் பிரபாகர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.