சாயல்குடி, மார்ச் 26: முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி நேற்று முதுகுளத்தூர் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தார். வெண்ணீர்வாய்க்கால், கிருஷ்ணாபுரம், வெங்கலகுறிச்சி, மகிண்டி, மைக்கேல்பட்டிணம், முத்துராமலிங்கப்பட்டி, சிறுதலை, செல்லூர், கதையன், காக்கூர், புளியங்குடி, ஆதனகுறிச்சி, இளங்காக்கூர் உள்ளிட்ட 45க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசும்போது, முதுகுளத்தூர் கிழக்கு பகுதியின் நீர் ஆதாரமான கூத்தன்கால்வாய் மராமத்து செய்யப்படும். இப்பகுதியில் மிளகாய், பருத்தி விவசாயம் அதிகமாக நடந்து வருகிறது. இந்த விவசாய பயன்பாட்டிற்கு அரசு மானியத்தில் போர்வெல் அமைத்து தரப்படும். மிளகாய், பருத்தி நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். சாலைகள் புதுப்பிக்கப்பட்டு கூடுதல் மினி பஸ் இயக்கப்படும்.