திருவள்ளூர், மார்ச் 24: பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.கிருஷ்ணசாமி நேற்று திருவள்ளூர் ஒன்றியத்தில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் புஜ்ஜி டி.ராமகிருஷ்ணன் தலைமையில் கிராமம், கிராமமாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது, “வெள்ளியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நவீன மருத்துவமனையாக மாற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன். ஏற்கனவே வெளியூரில் எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சமுதாய கூடம் கட்டப்பட்டு வருகிறது. திருவள்ளூர் ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டி கொடுத்துள்ளேன். பழுதடைந்த பள்ளி கட்டடங்களை சீரமைத்து கொடுத்துள்ளேன். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் புதிய தார் சாலைகள் ஆழ்துளை கிணறுகள் அமைத்துக் கொடுத்துள்ளேன்,”
இவ்வாறு அவர் பேசினார்.