அறந்தாங்கி, மார்ச்24: ஆவுடையார்கோவில் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து மீனவர் பலியானார். கோட்டைப்பட்டினம் சதாம்நகரைச் சேர்ந்த ரவி மகன் விக்னேஷ் என்ற ராகேஷ்( 16). இவர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வந்தார். இவர் தனது பைக்கில் அறந்தாங்கி வந்து விட்டு, ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். கோட்டைப்பட்டினம் அருகே உள்ள செம்மனாம்பொட்டல் அருகே சென்றபோது, பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.