சிவகங்கை, மார்ச் 23: சிவகங்கை மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் ஆயிரத்து 679 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஏப்.6ல் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து தேர்தலுக்கான பல்வேறு பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர், மானமாமதுரை ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. காரைக்குடியில் 345, திருப்பத்தூரில் 334, சிவகங்கையில் 348, மானாமதுரையில் 321 என மொத்தம் ஆயிரத்து 348 வாக்குச்சாவடிகள் இருந்தன. இந்நிலையில் 1050க்கும் மேற்பட்ட வாக்காளர் உள்ள இடங்களில் வாக்குசாவடிகளை 2ஆக பிரிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் காரைக்குடி தொகுதியில் 98வாக்குசாவடிகளும், திருப்பத்துர் தொகுதியில் 76 வாக்குசாவடிகளும், சிவகங்கை தொகுதியில் 79 வாக்குசாவடிகளும், மானாமதுரை தொகுதியில் 77வாக்குசாவடிகளும் சேர்த்து 331வாக்குசாவடிகள் 2ஆக பிரிக்கப்பட்டுள்ளன.