துறையூர், மார்ச் 23: துறையூர் அருகே நெட்டவேலம்பட்டி ஏரிக்கு புளியஞ்சோலை ஆற்றில் இருந்து நீர்வரத்து வாய்க்கால் அமைக்கக்கோரி தேர்தலை புறக்கணித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். துறையூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நெட்டவெலம்பட்டியில் 1,300 குடும்பங்கள் வசித்து வருகிறது. 3,000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் விவசாயத்தை நம்பி வாழக்கூடியவர்கள். இந்த கிராமத்தில் உள்ள ஏரிக்கும், 3 குட்டைகளுக்கும் நீர்வரத்து வாய்க்கால் இல்லாததால் புளியஞ்சோலை ஆற்றிலிருந்து நீர் வரத்து வாய்க்கால் அமைத்து தர வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.