பெரம்பலூர்,மார்ச் 23: பிரிந்து சென்ற கணவருடன் தன்னை சேர்த்து வைக்கக் கோரி இளம்பெண் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் அருகே உள்ள சிறுவயலூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி வசந்தி (31). இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். வசந்தி தனது 2 குழந்தைகளுடன் துறைமங்கலத்தில் உள்ள அவரது பாட்டி கருப்பாயி வீட்டில் வசித்து வருகிறார்.