ஜெயங்கொண்டம், மார்ச் 23: வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி ஜெயங்கொண்டம் தனியார் பள்ளியில் நடைபெற்றது. பயிற்சியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் கடைபிடிக்கும் செயல்கள் என்னென்ன என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. வாக்கு இயந்திரத்தை திறந்து முகவரின் முன்பாக மாதிரி வாக்குப்பதிவு செய்வது. பின்னர் அதை அழித்து இயந்திரத்தை சீல் வைப்பது. வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டுகளை அளிப்பது. அவர்கள் கையில் மை இடுவது. கையெழுத்து வாங்குவது, வாக்குச்சாவடியில் ஒருவரின் பெயரில் முன்னதாகவே ஒருவர் வாக்களித்து சென்றபின் அந்த ஒருவருக்கு வாக்களிக்க அனுமதி அளிப்பது எவ்வாறு போன்ற விதிமுறைகள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.