கரூர் ராயனூர் அருகே வாகன சோதனையில் ரூ.8 ஆயிரம் பறிமுதல் அதிகாரிகள் அதிரடி

கரூர், மார்ச்.21: கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அமுதா தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் நேற்று முன்தினம் ராயனூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த கோபால் என்பவரை நிறுத்தி குழுவினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது, அவரிடம், வாக்காளர் லிஸ்ட் மற்றும் ரூ. 8ஆயிரம் பணம் இருப்பது கண்டறியப்பட்டு அதனை கைப்பற்றி தாந்தோணிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இந்த சம்பவம் குறித்து தாந்தோணிமலை போலீசார் கோபால் மீது வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: