விருதுநகரில் தேர்தல் பெண் பார்வையாளருக்கு ‘ஐஸ்’ ஆரத்தி எடுத்து அமோக வரவேற்பு

விருதுநகர், மார்ச் 21: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பொதுப்பார்வையாளர்கள், செலவின பார்வையாளர்கள், போலீஸ் பார்வையாளர் என 9 பேர் வந்துள்ளனர். விருதுநகர், அருப்புக்கோட்டைதொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளராக அசாம் மாநிலத்தை சேர்நத பினித்தா பெக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், விருதுநகர் தாசில்தார் அலுவலகத்தில் வேட்புமனு பெறுதல் மற்றும் தேர்தல் விதிமுறைகளை ஆய்வு செய்ய வந்தார்.

அப்போது அவரை ‘ஐஸ்’ வைக்கும் வகையில் தாசில்தார் சிவஜோதி தலைமையில் பெண் அலுவலர்கள் ஒட்டுமொத்தமாக அலுவலக வாசலில் சென்று பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து வரவேற்றனர். மேலும் மல்லிகை பூ, வெற்றிலை வைத்து சூடம் ஏற்றி ஆரத்தி எடுத்து பார்வையாளருக்கு திலகமிட்டனர். வரவேற்பில் உச்சி குளிந்த பொது பார்வையாளர் தாசில்தார் அலுவலகத்திற்குள் சென்று வேட்புமனு பெறும் நடைமுறையை சுமார் 1 மணிநேரம் கூர்ந்து ஆய்வு செய்து விட்டு வெளியேறினார்.

Related Stories: