நத்தம் தாலுகாவில் தேர்தல் பார்வையாளர் திடீர் ஆய்வு

நத்தம், மார்ச் 21: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 12ம் தேதி முதல் நடந்து வந்தது. நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இந்நிலையில் நத்தம் தொகுதியில் தேர்தல் பார்வையாளர் பாபுசிங் ஜமோடு திடீர் என ஆய்வு மேற்கொண்டார். அப்போது தாலுகா அலுவலகம் வந்த அவர் வேட்பாளர்களின் வேட்புமனு ஆவணங்களையும், எத்தனை வேட்பாளர்கள் மனு செய்துள்ளனர் போன்ற விபரங்களை கேட்டறிந்தனர். தொடர்ந்து அவர் வாக்குச்சாவடி மையங்களையும் ஆய்வு செய்து அங்கு செய்து தரப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.உடன் தேர்தல் நடத்தும் அலுவலர் திருமலை, உதவி அலுவலர் விஜயலட்சுமி மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.

Related Stories: