ஈரோடு, மார்ச் 21: தேர்தல் பணிகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து பார்வையாளர்கள் குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். சட்டமன்ற தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள், தேர்தல் விதிமுறைகள், பறக்கும் படை உள்ளிட்ட குழுக்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து தோ்தல் நடத்தும் அலுவலா–்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர்கள் நேற்று ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடத்தினர். கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார்.