திருவில்லி தொகுதியில் போட்டியிட மாற்றுத்திறனாளி வேட்புமனு

திருவில்லிபுத்தூர், மார்ச் 20: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் நேற்றே கடைசி நாளாகும். எனவே நேற்று காலையில் இருந்து பலரும் ஆர்வத்துடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர். திருவில்லிபுத்தூர் அருகே விளாம்பட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜன். மாற்றுத்திறனாளி. அனைத்து மக்கள் புரட்சி கட்சியை சேர்ந்த இவர் நேற்று திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய தாலுகா அலுவலகம் வந்தார். அலுவலகத்தின் முன்புறம் டூவீலரை நிறுத்தி விட்டு, அங்கிருந்து தவழ்ந்து வந்து பாண்டியராஜன், தேர்தல் அதிகாரி முருகனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

Related Stories: