கோவை, மார்ச் 20: கோவை சிங்காநல்லூர் தொகுதியில் இரண்டாவது முறையாக திமுக வேட்பாளராக எம்எல்ஏ நா.கார்த்திக் போட்டியிடுகிறார். இதையடுத்து, அப்பகுதியில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், கோவை பீளமேடு மசக்காளிபாளையம் பகுதியில் திமுக தலைமை தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. இதனை சிங்காநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ கலந்து கொண்டு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், மதிமுக மோகன் குமார், ஆடிட்டர் அர்ஜூனன் ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சுந்தரம், விடுதலை சிறுத்தை கட்சி இலக்கியன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் மாரிச்செல்வம், செல்வராஜ், உதயகுமார், பகுதி கழக செயலாளர் எஸ்.எம்.சாமி, பொறுப்பாளர் சிங்கை சிவா, நாகராஜ் மற்றும் கூட்டணி கட்சியினர் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.