இரூரில் உலக வனவிலங்கு தின கருத்தரங்கம்

பாடாலூர், மார்ச் 18: ஆலத்தூர் தாலுகா இரூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் பயிலும் இறுதியாண்டு மாணவிகள் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. உலக வன விலங்கு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கருத்தரங்கிற்கு தந்தை ரோவர் வேளாண்மை கல்லூரியின் முதல்வர் டாக்டர் வள்ளியப்பன் தலைமை வகித்தார். மூத்த பேராசிரியர் டாக்டர் வகாப் முன்னிலை வகித்தார். கல்லூரியின் இறுதியாண்டு மாணவிகள் உலக வனவிலங்கு தினத்தின் குறிக்கோள், சிறப்பு குறித்தும், வனவிலங்குகளின் முக்கியத்துவம் உள்ளிட்ட தலைப்புகளில் மாணவிகள் பேசினர். கருத்தரங்கில் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Related Stories: