தேர்தல் விழிப்புணர்வு டூவீலர் பேரணி

துறையூர், மார்ச் 18:  உப்பிலியபுரம் வட்டாரம், வெங்கடாஜலபுரத்தில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது. தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு கருவியில் வாக்களிப்பது தொடர்பாக வாக்காளர்களுக்கு செயல் விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள் டூவீலரில் தலைக் கவசம் அணிந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளுடன் பேரணியாக சென்றனர். நிகழ்ச்சியில் துறையூர் தாசில்தார் செல்வம், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் லலிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: