நத்தம் அருகே ஜவுளி வியாபாரியிடம் ரூ.99 ஆயிரம் பறிமுதல் பறக்கும் படை நடவடிக்கை

நத்தம், மார்ச் 18:  நத்தத்தில் ஜவுளி வியாபாரியிடம் இருந்து ரூ.99 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. நத்தம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நத்தம் அருகே உள்ள மெய்யம்பட்டி பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள்  நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரி திருமலை தலைமையில் உதவி அலுவலர்கள் மறித்து சோதனை மேற்கொண்டனர். இதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 98 ஆயிரத்து 970 ரூபாய் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் நத்தத்தை சேர்ந்த ஜவுளி வியாபாரி கமர்தீன் என்றும் தெரிய வந்தது. இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் நத்தம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: