திருவையாறு, ஆக.1: திருவையாறு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 40 ஊராட்சிகளிலும் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது; திருவையாறு ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் மின்மோட்டார் மூலம் குடிநீர் எடுப்பது, வீட்டில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதாகவும் புகார் வந்துள்ளது.
ஏற்கனவே இரண்டு ஊராட்சிகளில் மின் மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் மின் மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சினால் மின் மோட்டார் பறிமுதல் செய்து குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
