கறம்பக்குடி, ஜூலை 31: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு திடலில் விஷப்பாம்பு நடமாட்டம் இருந்ததாக தெரியவந்தது. தகவலறிந்த கறம்பக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு பாபில்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு அச்சுறுத்திய விஷப்பாம்மை மீட்டனர். தீயணைப்பு வீரர்கள் விஷப்பாம்பை பத்திரமாக மீட்டு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விட்டு விட்டனர்.
